Date:

நுவரெலியா ஹக்கலயில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுவரெலியா பதுளை பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (06) நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த லொறியொன்று ஹக்கல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் இருந்ததாகவும் சாரதி மாத்திரம் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் செங்குத்தான பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி லொறியின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு அங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் பல வீதித்தடைகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...