Date:

ஜனாதிபதி – கென்ய ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவுக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும், அதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கொவிட் தடுப்புக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை கென்ய ஜனாதிபதி பாராட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், நாட்டின் மொத்த சனத்தொகையில் 70சதவீதமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமையானது ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமையும் எனவும் கென்ய ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி...

இன்று முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்

இன்று (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை...

தேர்தலில் Sanae Takaichi அபார வெற்றி

ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த அக்டோபரில் பதவி...

சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப....