Date:

ஜனாதிபதி – கென்ய ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவுக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும், அதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கொவிட் தடுப்புக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை கென்ய ஜனாதிபதி பாராட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், நாட்டின் மொத்த சனத்தொகையில் 70சதவீதமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமையானது ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமையும் எனவும் கென்ய ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை வரும் தளபதி!

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் உபேந்த்ரா த்விவேதி நாளை மறுதினம் இலங்கைக்கு...

FCID யில் முன்னிலையாகிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5)...

சர்ச்சைக்குரிய பாடத் தொகுதி தொடர்பான அறிக்கை சமர்பிப்பு

புதிதாக அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழிப் பாடத் தொகுதியில் (Module),...

டிட்வா சூறாவளி பாதிப்பு : 100 பாடசாலைகளைப் பயன்படுத்த முடியாத நிலை

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 100...