Date:

பதவி விலகுகிறார் ஜப்பான் பிரதமர்!

ஜப்பானில் எதிர்வரும் 29 அம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா அறிவித்துள்ளார்.

யோஷிஹிடே சுகாவின் ஆட்சி தொடர்பில் அதிருப்தி நிலவி வந்த நிலையில், அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் யோஷிஹிடே சுகா பிரதமராக நியமிக்கப்பட்டார்.

கொரோனா பரவல் காரணமாக ஜப்பானில் டோக்கியோ உட்பட சில நகரங்களில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை விடுத்து கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அந்நாட்டு பொதுத்தேர்தல் நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபை மறுசீரமைப்பு மேலும் தாமதம்!

தேசிய மின்சக்தி கொள்கை இம்முறையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (23)...

யாழ். சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானம் இடைநிறுத்தப்பட்டது

வட மாகாணத்தின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானப் பணியானது தற்காலிகமாக...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு ஆபத்து

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில்...

கொழும்பு மாநகரசபை ஊழல்: பொதுமக்களிடம் உதவி கோரல்

2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர...