Date:

கலாநிதி இல்ஹாம் மரிக்காரின் அனுசரனையில் புத்தளம் வை.எம்.எம்.ஏ கிளை உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு ஜேர்ஸி வழங்கி வைப்பு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ் உதைப்பந்தாட்ட போட்டி இம்முறை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு அரங்கில் வெகு விமரிசையாக 30 செப்டெம்பர் 2023 மற்றும் 1 ஒக்டோபர் 2023 ஆம் திகதிகளில் நடைப்பெறவுள்ளது.

மேற்படித்தொடரில் புத்தளம் அங்கத்துவ வை.எம்.எம்.ஏ கிளை சார்பான வீரர்களுக்கான ஜேர்ஸிக்களை CBS foundation அமைப்பின் ஸ்தாபகரும் , அமேசன் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரிக்கார் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் மலேசியாவில் சாதனைப்படைத்த
சர்வதேச ரீதியிலான மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் உயரம் பாய்தலில் தங்கப்பதக்கம் வென்ற ஆசிரியர் M. F. M. Humayoon, 200M ஓட்டப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ஆசிரியர் M. F. M. Thufail ஆகியோருக்கான கௌரவிப்பு I soft கல்லூரியில் இன்று (2023-09-28) நடைப்பெற்றது.

இந் நிகழ்வில் புத்தளம் வை.எம்.எம்.ஏ மாவட்ட பணிப்பாளர் ஆசிரியர் எம்.டீ.எம் நபீல் , மரண விசாரணை அதிகாரியும் , மத்தியஸ்த சபை உப தலைபர்.பீ.எம் ஹிசாம், வை.எம்.எம்.ஏ கிளையின் பொறுப்புதாரியும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த சபை அதிகாரி முஜாஹித் நிசார் , I soft கல்லூரியின் பணிப்பாளரும் , கல்வியாளருமான அப்ராஸ் ஆசிரியர், புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளரும், புத்தளம் தள வைத்தியசாலையின் முகாமைத்துவ உதவியாளருமான ஜவ்ஸி ஜதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹொங்கொங் அணியை வீழ்த்தியது இலங்கை

ஆசிய கிண்ணத்தின் இன்றைய (15) போட்டியில் ஹொங்கொங் அணியை 4 விக்கெட்டுக்களால்...

இஸ்ரேல்-கட்டார் தாக்குதல்;அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம்

பலஸ்தீனத்துடனான தற்போதைய மோதலுடன் தொடர்புடைய, கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த...

ரூ. 2000 படிப்படியாக சுற்றோட்டத்திற்கு

இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2000...

மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் – அரசாங்கம்

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில்...