Date:

மாடியில் இருந்து குதித்து தன்னுயிரை மாய்த்த 17 வயது சிறுவன்..! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

தெல்தெனிய வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட  17 வயதுடைய சிறுவன் தொலைபேசிக்கு  அடிமையாகி மன உளைச்சலுக்கு ஆளானவர் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அலைபேசியை கைப்பற்றியதையடுத்து கத்தியை எடுத்து தனது உடலின் பல பாகங்களை வெட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பன்வில கந்தேகும்புர பிரதேசத்தை சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருக்ஷ (வயது 17) என்ற   சிறுவன் ஒரு நாளைக்கு 18 மணித்தியாலங்களை அலைபேசியுடன் தனியாக செலவிடுவதுடன், தொடர்பு இல்லாமல் நேரத்தை கடத்துவதற்காக பல்வேறு வீடியோ கேம்களுக்கு அடிமையாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

தெல்தெனிய வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன் குறித்த சிறுவன் தனது பெற்றோருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்ததாகவும் அக்கடிதத்தில் தனது பெற்றோரை கடுமையாக குற்றம் சுமத்தியதாகவும்   குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெல்தெனிய வைத்தியசாலை நிர்வாகத்திற்கு கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சேனகக்க தலகல பணித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின்...

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாக மாற்றும் வகையில் டிஜிட்டல் கைரேகை...

புறக்கோட்டை ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்கள்!

கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறைllயில் உள்ள குப்பைத் தொட்டியில்...

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண்...