Date:

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியிருக்கும் 115 உணவுக் கொள்கலன்கள் வீணாகும் அபாயம்

கொழும்பு துறைமுகத்தில் உணவுப் பொருட்கள் அடங்கிய 115 கொள்கலன்களில் உள்ள பொருட்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பல நிறுவனங்களிடமிருந்து அனுமதிகள் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, 74 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான உணவுப் பொருட்களை உள்ளடக்கிய 115 கொள்கலன்களை விடுவிக்க இரண்டு வருடகால அவகாசம் சென்றுள்ளது.

இதனால் பொருட்களை அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

விவசாயத் திணைக்களம், சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தினால் பொருட்களை வெளியிடுவதற்கு வழங்கப்பட வேண்டிய அறிக்கைகள் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கமைய, உணவுப் பொருட்கள் அடங்கிய 27 கொள்கலன்களை வெளியிட 563 நாட்களும், மற்ற 27 உணவுப் பொருள்களைக் கொண்ட கொள்கலன்களை வெளியிட சுமார் இரண்டு வருடங்களும் சென்றுள்ளன.

இந்த உணவு கொள்கலன்கள் தொடர்பாக, இலங்கை சுங்கம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை தொடர்ந்து விசாரணை நடத்தியது.

இதேவேளை, 15 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 624,877 கிலோ மஞ்சள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி  கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்மையினால் தேவையான சட்ட நடைமுறைகள் இன்றி இரண்டு வருடங்களுக்கும் மேலாக இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மஞ்சள் 2020ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“நீதிமன்ற கட்டமைப்பு டிஜிட்டல் மயமாகும்”

நாடு முழுவதும் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதை விரைவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகப் புதிதாக...

கினிகத்தேன விபத்தில் கொழும்பு பெண் பலி

கொழும்பு மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில்...

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள ரோஹிதவின் மகள்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (31)...

பலஸ்தீன தேசத்தை ஆதரிக்கிறேன், பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரிட்டனின் முடிவை வரவேற்கிறேன்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரிட்டன் பிரதமரின் முடிவை வரவேற்பதாக  நாடாளுமன்ற உறுப்பினர் உமா...