Date:

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்?

இலங்கை வழங்கியுள்ள கடன் வசதிகளை மீளாய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (27) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் கருத்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் சில சாதகமான அம்சங்களைக் காட்டினாலும், மற்ற துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும், இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம் எனவும் கூறினார்.

மேலும், குறிப்பாக வரி அறவீடு முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதிநிதிகள் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதன்படி, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியம் இணங்கிய 2.9 பில்லியன் டொலர் கடனின் இரண்டாம் பகுதியை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

எனினும் கடனின் இரண்டாம் பகுதியை வெளியிடுவதற்கான கால அளவு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் தூதுக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம் 

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின்...

தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கும் இலங்கை மின்சார பொறியியலாளர்கள்

  இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட...

ஹொரனை பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின்...