Date:

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்?

இலங்கை வழங்கியுள்ள கடன் வசதிகளை மீளாய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (27) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் கருத்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் சில சாதகமான அம்சங்களைக் காட்டினாலும், மற்ற துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும், இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம் எனவும் கூறினார்.

மேலும், குறிப்பாக வரி அறவீடு முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதிநிதிகள் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதன்படி, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியம் இணங்கிய 2.9 பில்லியன் டொலர் கடனின் இரண்டாம் பகுதியை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

எனினும் கடனின் இரண்டாம் பகுதியை வெளியிடுவதற்கான கால அளவு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் தூதுக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (19) அவதானம் செலுத்த வேண்டிய...

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

மியான்மரில், வெள்ளிக்கிழமை (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.57 மணியளவில் (இலங்கை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373