Date:

அவுஸ்திரேலிய பெண் தொடர்பில் தனுஸ்க வெளியிட்ட பரபரப்பு தகவல்!

தனுஷ்க குணதிலக மீது வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பெண் அவருடன் இருந்தவேளை அவரின் போன ஜென்மங்கள் தொடர்பில் தனக்கு தெரியும் என தெரிவித்ததால் தான் அச்சமடைந்ததாக தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (20) வெளியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தனுஷ்க தெரிவித்துள்ள விடயங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப் பெண்ணை அவர் வன்முறை செய்ததாக தனுஷ்க ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள  நிலையில்,  தனிமையில் இருந்த போது  அந்த பெண்ணுடன் இடம்பெற்ற ஆன்மீக உரையாடல் தொடர்பில் தனுஷ்க தெரிவித்துள்ளார்.

” அந்த உரையாடல் சுவராஸ்யமாக இருந்தது என நான் நினைத்தேன். அந்த பெண்ணிற்கு இலங்கை கலாச்சாரம் பௌத்தம் குறித்து நன்கு தெரிந்திருக்கின்றது என நினைத்தேன்.

நான் சிரித்துக்கொண்டே முன்னைய ஜென்மத்தில் நான் யார் என உன்னால் தெரிவிக்க முடியுமா என கேட்டேன். நானும் அவரின் அயலவர்களும் தாய்லாந்தில் பிறந்தோம் என அந்த பெண் தெரிவித்தார்.

தன்னால் எனது போன ஜென்மத்தை பார்க்க முடிவதாக அவர் குறிப்பிட்டார் நான் அச்சமடைந்தேன். ஏன் என தெரியவில்லை எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டது.

அந்த பெண் சற்றுவித்தியசாமானவராக காணப்படுகின்றார் என நினைத்தேன். அந்த பெண் எனக்கு டக்சியை ஏற்பாடு செய்து தந்தார். பின் அங்கிருந்து புறப்பட்டேன் .” என தனுஷ்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை பாதிப்புக்குள்ளான  பெண் முன்னைய ஜென்மங்கள் குறித்த பேச்சுக்களை தான் முதலில் ஆரம்பிக்கவில்லை என தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கை கிரிகெட் வீரரான  தனுஷ்க, ஆப் ஒன்றில் அறிமுகமான அவுஸ்திரேலிய  பெண்,  பாலியல் குற்றம்  சுமத்தப்பட்ட நிலையில் பல மாதங்களாக  அது தொடர்பிலான வழக்கு இடம்பெற்று வரும் நிலையில், அந்த    சம்பவத்தில் தனுஸ்க  சிக்கிதவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373