Date:

20 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

குளியாப்பிட்டிய பாடசாலையொன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய இங்குருவத்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு அருகிலுள்ள மரமொன்றிலிருந்த குளவிக் கூட்டினை பருந்து தாக்கியதனால் கூட்டிலிருந்து கலைந்த குளவிகள் மாணவர்கள் மற்றும் பெற்றோரை கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அம்பியூலன்ஸ் வண்டி உதவியுடன் வைத்தியாலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குளவிக் கூட்டை அகற்றும் நடவடிக்கையில் குளியாபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஊழியர்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...

வெலிக்கடை சிறைச்சாலையில் சிக்கியது கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல்...

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா!

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தீர்த்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த...