Date:

புற்றுநோய்க்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

புற்றுநோய் மருந்துகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான விலைமனுக்கோரலை சுகாதார அமைச்சு திடீரென நிராகரித்து விட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ருக்சான் பெல்லன,

“ஐம்பதிற்கும் அதிகமான புற்றுநோய்க்கான மருந்துகள் நிறைவடைந்துள்ளன.

சீக்கிரமாக புற்றுநேய்க்கான மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு சுகாதார அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கு அமைவாக நடவடிக்கை எடுத்த போதிலும் நேற்று முன்வைக்கப்படவிருந்த விலைமனுக்கோரலை முன்வைக்காமல் அதனை மூடி நிராகரித்து விட்டார்கள்.

சரியான விடயங்களை செய்வதற்கு அமைச்சருக்கு அதிகாரம் இருக்கின்றது. ஆனால் அமைச்சர் அதிகாரிகள் கூறும் விதத்திலும் மருந்து நிறுவனங்கள் கூறும் விதத்திலும் செயற்படுகின்றார்.

இவர்கள் செய்த இந்த வேலையினால் அரச மருத்துவ அதிகாரிகள் திருட்டுதனமான செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கட்டளை படி செயற்பட நேரிடுகின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...