Date:

மக்களால் பசியுடன் நடக்க முடியாது – சந்திம வீரக்கொடி

இந்த நேரத்தில் செய்ய வேண்டியது நடைபாதைகளை உருவாக்குவதா அல்லது மக்களைப் பாதித்த வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதா என்று சிந்திக்க வேண்டும் என்று காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

”நாங்கள் பாதைகள் அமைப்பதற்கு எதிரானவர்கள் அல்ல, நாட்டின் பிற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் நடைபாதைகள் அமைக்கப்படுகின்றனவா அல்லது மக்களின் பசியை போக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் பசியுடன் மக்கள் நடக்க முடியாது.

தற்போது எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறைந்த விலையில் சீனி வாங்க மக்கள் சதொசவுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஏனைய பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.

அத்தகைய நேரத்தில் எங்களில் சிலர் இந்த நடைபாதை பற்றி பேசுகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் எங்களின் பெற்றோர்களும் இதனால் கடிந்து கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நேரத்தில், கட்சி பேதமின்றி நாட்டு மக்களின் பசியை போக்கவும், கொரோனா பேரழிவிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி மதுரோவின் புகைப்படத்தை வெளியிட்ட ட்ரம்ப்

அமெரிக்க போர்க்கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெனிசுலா ஜனாதிபதி மதுரோவின் புகைப்படத்தை வெளியிட்ட...

போக்குவரத்து அபராதங்களை உடனுக்குடன் செலுத்தும் புதிய வசதி!

எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர், Govpay மூலம் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை...

வெனிசுலா ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி கைது!

அமெரிக்கா வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் உட்பட பல பகுதிகளில் ராணுவத் தாக்குதல்களை...

வருமானத்தில் சாதனை படைக்கும் பின்னவல யானைகள் காப்பகம்!

பின்னவல யானைகள் காப்பகம் கடந்த ஆண்டில் 1042 மில்லியன் ரூபாய் வருமானத்தை...