Date:

பொலிஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாசகர்: விசாரணைகளில் வெளியான அதிர்ச்சி தகவல்

காலி, களுவெல்ல பிரதேசத்தில் 120 மில்லிகிராம் போதைப்பொருளுடன் யாசகர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

 அவரிடம் நடத்திய விசாரணையில், நாளாந்தம் 8000 முதல் 10000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக தெரியவந்துள்ளது.

 இந்த யாசகர் 42 வயது மதிக்கத்தக்க ஒருவர் எனவும் அவர், போதை மற்றும் மதுவுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

களுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பொதியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்தில் கடமையாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் தனது காலை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த யாசகர் தனது நாளாந்த வருமானத்தில் 3000 ரூபாவை வங்கியில் வைப்பு செய்துவிட்டு தினமும் முச்சக்கர வண்டியில் சென்று சட்டவிரோத மதுபானம் அருந்துவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த இவர் திருமணமானவர் எனவும் இரண்டு பிள்ளைகளின் பராமரிப்புக்காக மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

80 லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஆணுறுப்பை காட்டிய பொகவந்தலாவ குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்

தனது ஆணுறுப்பை காண்பித்த பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரைஎதிர்வரும் 28ஆம் திகதி...

கைதான அநுர வல்பொலவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட புவிச்சரிதவியல்...

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில்...

Breaking: மக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டிருந்த 42 இந்தியர்கள் உயிரிழப்பு!

தெலுங்கானாவில் இருந்து மக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்கள் இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளனர் இந்த...