Date:

கொழும்பின் பல பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்

பயணிகளின் பாதுகாப்பிற்காக கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேவைப்பட்டால் ஏனைய ரயில் நிலையங்களுக்கும் இராணுவத்தினர் அனுப்பப்படுவார்கள் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட ரயில் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் நிலையங்களில் பல்வேறு சிக்கல் நிலைகள் ஏற்பட்டன.

ஹொரபே ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரயில் செலுத்துனருக்கும் பயணிகளுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

ரயில் தாமதமாக வருவதால் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்வதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கட்டுப்படுத்த இராணுவத்தினரை களமிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஆசிரியர், அதிபர் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

கஷ்டப் பிரதேச சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அதிபர்கொடுப்பனவுகளில் அதிகரிப்பு கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில்...

இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரி நீக்கம்

இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரியை நீக்கி பெறுமதி சேர்...

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றுக்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு...

மைத்திரி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை...