Date:

இலங்கையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ? – பேராசிரியர் எச்சரிக்கை

இலங்கையின் இந்தோ – அவுஸ்திரேலிய தட்டு எல்லையில் மற்றுமொரு பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புக்கு 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடல் பகுதியில் நேற்று 11ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட 4.65 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நிலநடுக்கம் குறித்து பேராசிரியர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் இந்தோ – அவுஸ்திரேலிய டெக்டோனிக் தகடு மற்றும் இந்தோனேசியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான டெக்டோனிக் தகடுகளில் 08 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 4 அளவை விட அதிகமாக பதிவாகியுள்ளது.

இருப்பினும், இந்த ஆழ்கடல் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை எனவும், கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள கடலில் நடுக்கம் ஏற்பட்டால் சுனாமி அபாயம் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் நாட்டில் பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதுடன், மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சக்திவாய்ந்த நிலநடுக்கமாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை இந்திய – அவுஸ்திரேலிய பீடபூமியில் அமைந்துள்ள இரண்டு தகடுகள் பிரிந்து பூமிக்குள் ஏற்படும் மாற்றங்களே இந்த நிலநடுக்கங்களுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அரைக்கோளத்தில் எதிர்காலத்தில் பல நிலநடுக்கங்கள் ஏற்படலாம் எனவும், அதற்காக நாம் பயப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373