Date:

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிய வாய்ப்பு – இன்றைய போட்டி தொடர்பான அறிவிப்பு

இலங்கை அணி பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று(09) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அதேவேளை ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுப்பர் 4 சுற்றுப் போட்டிகளைக் காண 1,000 ரூபாவிற்கு டிக்கெட்டுகள் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் (Lower Block) சி மற்றும் டி  பிரிவில் செப்டம்பர் 9, 12, 14, 15 ஆகிய திகதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை விளையாட்டு ரசிகர்கள் 1,000 ரூபாவுக்குவாங்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இன்றைய போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டால் நாளை(10) போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காஸாவுக்கு ஆதரவாக மொரோக்கோ செயற்பாட்டாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

காஸாவுடனான ஒருங்கிணைந்த சர்வதேச ஆதரவுச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, கடந்த செவ்வாய்கிழமை...

விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் கைது

விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர், 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள...

புதிய உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) புதிய...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு புகார்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான புகார்களை விசாரித்து உடனடியாக தீர்வு காணும் வகையில்,...