Date:

ஜனாதிபதியின் அவசரகால விதிமுறை பிரகடனம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – சுமந்திரன் (காணொளி)

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளானது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அந்தக் கட்டளைச் சட்டத்தின் iiஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவானது தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் தருணத்திலேயே பிரகடனப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் சுகாதார ரீதியான பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அது தொடர்பான அவசரகால சட்டம் ஏன் இதுவரை பிரகடனப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’ரி 20’ உலகக்கிண்ணக் கோப்பையை சுற்றுப்பயணம் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ஐ.சி.சி. இருபதுக்கு...

இலங்கை – இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று!

சு்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்...

தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு!

முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (22) கொழும்பு...

வளியின் தரம் குறைவு! | முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்..!

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட...