Date:

ஜனாதிபதியின் அவசரகால விதிமுறை பிரகடனம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – சுமந்திரன் (காணொளி)

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளானது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அந்தக் கட்டளைச் சட்டத்தின் iiஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவானது தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் தருணத்திலேயே பிரகடனப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் சுகாதார ரீதியான பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அது தொடர்பான அவசரகால சட்டம் ஏன் இதுவரை பிரகடனப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானுக்கு ஆதரவு வழங்கும் சீனா

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு...

அராம்கோ’ வை மூடியது சவுதி அரேபியா

ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான...

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...

Breaking நெதன்யாகு அலுவலகத்தில் தாக்குதல்! நெதன்யாகு கதி என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன்...