Date:

ஜனாதிபதியின் அவசரகால விதிமுறை பிரகடனம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – சுமந்திரன் (காணொளி)

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளானது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அந்தக் கட்டளைச் சட்டத்தின் iiஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவானது தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் தருணத்திலேயே பிரகடனப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் சுகாதார ரீதியான பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அது தொடர்பான அவசரகால சட்டம் ஏன் இதுவரை பிரகடனப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...