மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்படும் முக்கிய நிகழ்வுகளில் பிரதான நிகழ்வு இன்றைய தினம் (06) நடைபெற்றது
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்
.
இந்த நிகழ்வின் போது பாடசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு நூற்றாண்டு சிறப்பு சஞ்சிகையும் முத்திரையும் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது .
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
‘கம்பஹா மாவட்டத்தில் பிரதான முஸ்லிம் கல்லூரியாக அல்முபாரக் தேசிய பாடசாலை திகழ்கின்றது .இனி இலங்கையிலும் பிரதான முஸ்லிம் பாடசாலையாக மாறுவதற்கான வேலைகளை தொடர்ந்து செயற்படுத்த வேண்டும் . இந்த பாடசாலை முழுமையாவதற்கு இன்னும் தேவையாக இருப்பது இந்த ஒன்றுகூடல் மண்டபம் மாத்திரம்தான் அதை நான் முழுமையாக பெற்றுத்தருகின்றேன் ‘ என ஜனாதிபதி உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார்,கிராமப்புற விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் – காதர் மஸ்தான் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.