Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க, ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டில் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவில் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை பதிவு செய்யுமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது.

இதற்தமைய, ஓகஸ்ட் 14 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், முன்னாள் வீரருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டது.

இவருக்கு, எதிரான குற்றச்சாட்டுகளுக்கான போதுமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

லங்கா பிரீமியர் லீக் நவம்பர் (27)  தொடக்கம் டிசம்பர் 17, 2020 வரை இலங்கையின் அம்பாந்தோட்டையில் நடைபெற்றிருந்தது.

38 வயதான அவர், 2020 இல் லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) பங்கேற்கும் இரண்டு கிரிக்கெட் வீரர்களை துபாயில் இருந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் அணுகி, போட்டியின் போது ஆட்ட நிர்ணயம் செய்ய தூண்டினார் என்பதிற்கிணங்க, எல்பிஎல் போட்டியில் ஊழல் நடைமுறைகளுக்கு அவர்களைத் தூண்டியதாக  ஒரு ஊடக அறிக்கை குற்றம் சாட்டியது.

எவ்வாறாயினும், இவர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார், அதே நேரத்தில் அவை தன்னை அவதூறு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்று கூறினார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கடுமையாக மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...