Date:

இலங்கையில் சீனி விலை அதிகரிப்பு?

தற்போது  இலங்கையில்  சீனி விலை அதிகரிக்குமென எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்தியாவில் சீனியின் விலை கடந்த ஆறு ஆண்டுகளில் என்றும் இல்லாதவாறு கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு மெட்ரிக் டொன் சீனியின் விலை 3 வீதத்தினால் அதிகரித்து தற்போது 37,760 இந்திய ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 15 நாட்களுக்குள் இந்த விலை அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கரும்பு விளைச்சல் அதிகமுள்ள பிரதேசங்களில் பருவமழை குறைவடைந்துள்ளமை, இருப்பு குறைவு காரணமாக சீனி விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது, பண வீக்கத்தை அதிகரித்துள்ளதுடன், சீனி ஏற்றுமதிக்கு தடை விதிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

சீனி உற்பத்தி வெகுவாக குறைவடையுமெனவும் எனவும், சீனியை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு விரும்பவில்லை எனவும் சீனி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் சீனி ஏற்றுமதியை இந்தியா தடை செய்யுமென எதிர்பார்க்கபப்டுகிறது.

இதனிடையே, சர்வதேச சந்தையில் சீனி விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சீனி விலை அதிகரித்துள்ள போதிலும் சர்வதேச சிந்தையுடன் ஒப்பிடுகையில், விலை சற்று குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச சிந்தையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சீனி விலை 38 வீதத்தினால் குறைவாக காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த பின்னணியில், இலங்கையிலும் சீனி விலை அதிகரிக்குமென எதிர்பார்க்கபப்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“நீதிமன்ற கட்டமைப்பு டிஜிட்டல் மயமாகும்”

நாடு முழுவதும் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதை விரைவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகப் புதிதாக...

கினிகத்தேன விபத்தில் கொழும்பு பெண் பலி

கொழும்பு மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில்...

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள ரோஹிதவின் மகள்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (31)...

பலஸ்தீன தேசத்தை ஆதரிக்கிறேன், பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரிட்டனின் முடிவை வரவேற்கிறேன்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரிட்டன் பிரதமரின் முடிவை வரவேற்பதாக  நாடாளுமன்ற உறுப்பினர் உமா...