Date:

மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவி அதி சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை

குருநாகலில் திடீர் தலைவலி காரணமாக மூளைச்சாவு அடைந்த மாணவி ஒருவர் உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளை பெற்றுள்ளார்.

 

இந்த மாணவி மூளைச்சாவு அடைந்தபோது இறுதி தருவாயில் மற்றுமொரு உயிரை காப்பாற்றியுள்ளார்.

மாணவி இறந்தபின் அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ள இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

34 வெற்றி, 38 தோல்வி : இலங்கை அணிக்கு பேரிடி

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின்...

இன்று இரவு விலகுகிறார் சனத்

இன்றைய SL vs Pak போட்டிக்குப் பிறகு Sanath Jayasuriya அவர்கள்...

லாஃப்ஸ் எரிவாயு தொடர்பில் விசேட அறிவிப்பு

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல்...

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி...