Date:

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்க கொழும்பு மாவட்ட கிளையால் இலவச மருத்துவ முகாம்

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்க கொழும்பு மாவட்ட கிளையால் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம், மற்றும் மூக்கு கண்ணாடி வழங்குதல், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் என்பன 10 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள், தாதிமார்கள் பங்கேற்புடன் அவிசாவளை,வகரத்தனசார மகா வித்யாலயத்தில் அண்மையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றதோடு
இதில் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர் மற்றும் நிர்வாக குழு முக்கிய உறுப்பினர்களும் பங்குகொண்டு இருந்தனர்.

அத்துடன் இச்சங்கத்தினரால் கடந்த வருடமும் கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் இவ்வாறான மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதோடு இனிவரும் காலங்களில் நாடு முழுவதும் இவ்வாறான சமூக செயற்பாடுகள் மற்றும் மருத்துவ முகாம்கள் ஆகியனவும் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து...

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...