Date:

நாடளாவிய ரீதியில் அதிரடி நடவடிக்கை: ஆயுதங்களுடன் களமிறங்கும் முப்படையினர்

நாட்டில் தொடர்ந்து இடம்பெறும் பாதாள உலக மோதல்கள், கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினர் இணைந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பற்றிய தகவல்களைத் தேடுவதற்கு புலனாய்வு அமைப்புகளையும், அவர்களைக் கைது செய்வதற்காக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரையும், சோதனைகளுக்கு முப்படையினரையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடல் மார்க்கமாக தப்பிச் செல்பவர்களைக் கைது செய்ய கடற்படையினரும், விமானம் மூலம் தப்பிச் செல்லும் குற்றவாளிகளை கைது செய்ய இரகசியப் பொலிஸாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், பாதாள உலக தலைவர்களில் முக்கியமானவர்கள் பலரை கைது செய்வதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking: ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது. 4 மீட்டருக்கு...

இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான...

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை  60,034...

ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளர் இராஜினாமா

ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளரும், மகப்பேறு மருத்துவருமான ஆலோசகர் வைத்தியர்...