Date:

நாடளாவிய ரீதியில் அதிரடி நடவடிக்கை: ஆயுதங்களுடன் களமிறங்கும் முப்படையினர்

நாட்டில் தொடர்ந்து இடம்பெறும் பாதாள உலக மோதல்கள், கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினர் இணைந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பற்றிய தகவல்களைத் தேடுவதற்கு புலனாய்வு அமைப்புகளையும், அவர்களைக் கைது செய்வதற்காக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரையும், சோதனைகளுக்கு முப்படையினரையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடல் மார்க்கமாக தப்பிச் செல்பவர்களைக் கைது செய்ய கடற்படையினரும், விமானம் மூலம் தப்பிச் செல்லும் குற்றவாளிகளை கைது செய்ய இரகசியப் பொலிஸாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், பாதாள உலக தலைவர்களில் முக்கியமானவர்கள் பலரை கைது செய்வதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பஸ் கட்டண அதிகரிப்பு யோசனை நாளை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிப்பதற்கு...

பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க…

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான…

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம்...

Breakingஇஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: இலங்கையர் நால்வர் காயம்

இஸ்ரேலின் டிமோனா பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை வீடியோ எடுக்க...