வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற இரு ஊழியர்களை பலகையால் தாக்கிய சம்பவம் ஒன்று தலாவ ஜெயகங்கை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
நேற்று (21) கெக்கிராவ தலாவ ஜயகங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் இருவர் இந்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க வந்து போது அன்றைய தினம் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்துவதாக அந்த வீட்டின் உரிமையாளர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஆனால்இ மின்சார அதிகார சபையிலிருந்து உரிய உத்தரவு வந்துள்ளதால், மின்வெட்டை கட்டாயம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறி மின்சாரத்தை துண்டிக்க முற்பட்ட போது, அதனைக் கேட்காததால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளரின் மகன், அருகில் இருந்த பலகையால் மின்சாரத்தை துண்டிக்க முயன்ற நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.