Date:

சில தனியார் வங்கிகளில் புதிய நடைமுறை – கடும் அதிருப்தியில் மக்கள்

நாட்டில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி புத்தகம் மூலம் பணம் பெறும் போது சில வங்கிகளினால் மிகவும் நியாயமற்ற முறையில் 50 ரூபாய் அறவிடுவதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்துஅநீதி இழைக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எவ்வித முன்னறிப்புகளுமின்றி இவ்வாறு வங்கி புத்தகம் மூலம் பணம் பெறும் போது தனியார் வங்கிகள் 50 ரூபாய் அறவிடுவதாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மையில் திம்பிரிகசாய பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியொன்றில் வங்கி புத்தகம் மூலம் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி முகாமையாளரிடம் வினவியுள்ளார்.

இதன்போது, ​​வாடிக்கையாளர்கள் வருவதால் வங்கிக்கு அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனால் வங்கி, அட்டைகளை பயன்படுத்தி ஏ.ரி.ம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் நடைமுறையை ஊக்குவிப்பதற்காக பணம் அறிவிடும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக வங்கி முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 50 ரூபாவை அறவிடுவதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளதா என வங்கி முகாமையாளரிடம் வினவியபோது, ​​அவ்வாறான அனுமதி இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடும் வாகன நெரிசல்

பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     அந்த...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373