Date:

இந்த ஆண்டின் வரலாற்றை மாற்றி புதிய அணி சம்பியனானது.

இலங்கையில் இடம்பெற்ற லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பி லவ் கண்டி அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற இறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அவுரா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 04 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தம்புள்ளை அவுரா அணி சார்பில் அதிகபடியாக, தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பின்னர் 148 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

பி லவ் கண்டி அணி சார்பில் அதிகபடியாக, கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களை பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற “பவளப் பொங்கல் 2026”

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது...

ஜொலிக்கப் போகும் ராகம நகரம்..!

ராகம நகரத்தை மையமாகக் கொண்டு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை...

அனுஷ பெல்பிட்ட கைது!

முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும்...

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட...