Date:

காலி முகத்திடலில் உணவு விற்பனை – தற்போது வௌியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள உணவு விற்பனையாளர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனூடாக பதிவு செய்யப்பட்ட உணவு விநியோகஸ்தர் எனும் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநீர் விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவுப் பொருட்களையும் விற்பனை செய்வோரை அடையாளங்கண்டு, அவர்களுக்கான அடையாள அட்டடைகளை வழங்கவுள்ளதாக கொழும்பு நகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனூடாக உணவு பாதுகாப்பு, உத்தியோகபூர்வ ஆடை என்பன தொடர்பில் அவர்களுக்கு தௌிவூட்டி வாய்மொழி மூல கேள்விகளுக்கு சரியான பதில்களை வழங்குவோருக்கு அடையாள அட்டைகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அடையாள அட்டைகள் ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம்...

வெல்லவாயவில் மற்றுமொரு கோர விபத்து

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று...

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்

ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

லான்சாவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம்...