Date:

Google Form தொடர்பில் இலங்கை பெண்களுக்கு எச்சரிக்கை

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட பாலியல் தகவல்கள் இணையத்தில் பெறப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான பல்கலைக்கழகமொன்றின் பேராசிரியர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

பெண்களின் பாலியல் நடத்தை மற்றும் அணுகுமுறைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் போர்வையில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி மிகவும் தனிப்பட்ட பாலியல் தகவல்களைப் பெறுவதற்கு இணையத்தில் கூகுள் படிவம் (Google forms) ஒன்று பரிமாறப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், பல பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூகுள் படிவத்தின்படி தங்களின் மிகவும் தனிப்பட்ட பாலியல் தகவல்களைத் தெரிவித்துள்ளதாகவும், கூகுள் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து நிர்ணயித்த வெற்றி இலக்கு

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம்...

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர் இன்று இலங்கை இந்தியாவில் ஆரம்பம்..!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று...

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள்…

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான...