Date:

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளி கல்வி முறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தெடர்பில் மேலும் கூறுகையில்,“பயிற்சி இல்லாத முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்கப்படுவதுடன் அதற்கான பணி விரைவாக ஏற்பாடு செய்யப்படும்.

ஐந்து பிரிவைச் சேர்ந்த முன்பள்ளி பிள்ளைகள் தரம் 1 க்கு வருகிறார்கள். ஒரு முன்பள்ளி அனைத்து செயற்பாடுகளையும் கற்றுத் தருகிறது. சில முன்பள்ளிகள் பத்துக்குள் எண்களைக் கற்றுக்கொடுக்கிறது. மற்றொன்று நூறுக்குள் எண்களைக் கற்றுக்கொடுக்கிறது.

இவ்வாறு கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் தரம் ஒன்றிற்கு வருகின்றார்கள்.

இப்போது ஜப்பானில், இவை அனைத்தையும் கற்பிக்கிறார்கள். அவ்வாறான ஒரு முறைமையை நடைமுறைப்படுத்தவே இரண்டு வருட முன்பள்ளிக்கான வேலைக் கட்டமைப்பை தேசிய கல்வி அல்லது சர்வதேச தரத்தின்படி உருவாக்க வேண்டும்.

அதனால்தான் அடுத்த வாரம் குழந்தைகள் விவகார அமைச்சகம், தேசிய கல்வி நிறுவனம் மற்றும் கல்வியாளர்களுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளேன்.”என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமேசனின் கிளவுட் சேவைகள் உலகளாவிய ரீதியில் செயலிழப்பு

அமேசன் நிறுவனத்தின் கிளவுட் சேவை கட்டமைப்பு தொழில்நுட்ப சிக்கல்களால் உலகளாவிய ரீதியில்...

’போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மீறியுள்ளது’

போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அப்பட்டமாக மீறியுள்ளதாக ஹமாஸின் மூத்த உறுப்பினர் இஸ்ஸாத்...

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை...

அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்றதற்காக ரூ.25 மில்லியனுக்கும் அதிகமான அபராதம்

அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை...