Date:

கிரிக்கெட் களத்தில் குதித்த மஹிந்த ராஜபக்ச அணி (photos)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி (12) சனிக்கிழமை நுவரெலியா மாநகரசபை பொது விளையாட்டு மைதானத்தில் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் மஹிந்த ராஜபாக்ஷ, நாமல் ராஜபக்ச, நுவாரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போட்டியில் பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இராஜாங்க அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இரு போட்டிகள் இடம் பெற்றதுடன், இரு போட்டிகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அணி வெற்றிபெற்றது.

போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச துடுப்பெடுத்தாடி போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது முதல் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் அணியும் இராஜாங்க அமைச்சர்களுக்கான அணியும் போட்டி பரீட்சையில் ஈடுபட்டது. முதல் போட்டியில் நாணயம் சுலட்சியில் பாராளுமன்ற அணி வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்மைய சம்பத் அதுகோரள்ள மற்றும் டபிள்யூ. டீ.வீரசிங் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களைக களமிறங்கினார்கள்.சம்பத் அதுகோரள்ள இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 19 ஓட்டங்களை பெற்றனர்.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டபிள்யூ. டீ. வீரசிங்க நான்கு சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்களை பெற்றார்.அணிசார்பில் தயாசாந்த நவனந்த 29 ஓட்டங்களையும் நாமல் ராஜபக்ஸ 21 ஓட்டங்களையும் பெற்றனர்.20 ஓவர் நிறைவில் 128 ஓட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் அணி பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இராஜாங்க அமைச்சர் அணியின் சார்பில் நிஸாந்த மற்றும் ஜானக்க சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டிய போதிலும் இந்த அணி 80 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடிந்தது.48 ஓட்டங்களால் பாராளுமன்ற அணி வெற்றி பெற்றது.இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் பாராளுமன்ற அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியின் பரிசளிப்பு வைபவம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.ஆட்ட நாயகனாக பாராளுமன்ற அணியை சேர்ந்த தயாசாந்த நவதந்தவும் சிறந்த துடுப்பாட்ட வீரராக டபிள்யு. டீ. வீரசிக்கவும் சிறந்த பந்து வீச்சாளராக இராஜாங்க அமைச்சர் அணியை சேர்ந்த பிரேமலால் ஜயசேக்கரவும் சிறந்த விக்கட் காப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் சீ. பீ. ரட்னாயக்க தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற பாராளுமன்ற அணியினர் மஹிந்த ராஜபக்ஷவின் சவால் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக் கொண்டனர்

நானுஓயா நிருபர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373