Date:

சரத் பொன்சேகா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நீதிமன்றம் தற்போது விதித்த உத்தரவு

இன்று (11) டீன்ஸ் வீதி, மருதானை வீதி (குலரத்ன மாவத்தை), டி.பி.ஜெயா மாவத்தை (டலி வீதி), ஒராபிபாஷா மாவத்தையிலிருந்து டெக்னிக்கல் சந்தி ஒல்கெட் மாவத்தை ஊடாக கோட்டை புகையிரத நிலையம் வரையில் நடைப்பயணம் ஒன்றை நடாத்துவதற்கு போராட்டக்காரர்கள் தயாராகி வருவதாக மருதானை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளுக்கு அமைய அதனைத் தடை செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (11) 12 மணி முதல் நாளை (12) 12 மணி வரை மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீன்ஸ் வீதி, மருதானை வீதி (குலரத்ன மாவத்தை), டி.பி.ஜெயா மாவத்தை (டலி வீதி), ஒராபிபாஷா மாவத்தை, மருதானையிலிருந்து டெக்னிக்கல் சந்தி ஒல்கெட் மாவத்தையின் இறுதி வரை பயணிகள் மற்றும் சாரதிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிராக பாகொட விஜித வங்சதேரர், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரத்நாயக்க முதியன்சேல மற்றும் தரிந்து அமில உடுவரகெதர உட்பட 11 பிரதிவாதிகள் மற்றும் பங்குபற்றும் அனைத்து போராட்டக்காரர்களுக்கும் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலமானார் என்ற செய்தி தொடர்பான விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள்...

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6...

பங்களாதேஷில் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில்...

தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா...