Date:

வலுசக்தி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

நிறைவடைந்த 7 மாத காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 69 ஆயிரம் மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்

2015 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிதியியல் ரீதியில் இலாபம் மற்றும் நட்டமடைந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு 20520 மில்லியன் ரூபா நட்டத்தையும், 2016 ஆம் ஆண்டு 53027 மில்லியன் ரூபா இலாபத்தையும் ,2017 ஆம் ஆண்டு 1055 மில்லியன் ரூபா இலாபத்தையும் பெற்றுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்காக கூட்டுத்தாபனத்தின் சேவையாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் ஏதும் வழங்கப்படவில்லை.

மாறாக 4.2 சதவீத வட்டி என்ற அடிப்படையில் புத்தாண்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

பெற்றோலிய விநியோகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க ஒரு தரப்பினர் ஆரம்பத்தில் இருந்து முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள்.இவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373