நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ திருமண நிகழ்வின்போது பயன்படுத்தப்பட்ட மின்சார பயன்பாட்டிற்கான கட்டணம் செலுத்தவில்லை என இலங்கை மின்சார சபை அறிவிக்கவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிலுவை கட்டணம் ஏதும் இருக்குமாயின் அதை இலங்கை மின்சார சபை அறிவித்தால் கட்டணம் செலுத்தலாமென் மேலும அவர் தெரிவித்தார்.
இவ் விடயத்தை ஒருதரப்பினர் தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,
‘திருமண விழாவுக்கு பயன்படுத்திய மின்சாரத்துக்கு இதுவரை கட்டணம் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபை இதுவரை அறிவிக்கவில்லை.
மின்சார நிலுவை தொகை ஏதும் இருப்பதாக மின்சார சபை அறிவித்தால் அதை செலுத்த தயார்’ என குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மின்கட்டணத்தை செலுத்தவில்லை என்ற விவகாரம் தற்போது அரசியல் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.
கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன ஆனால் எந்த குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW