இன்று (04) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தம்புத்தேகம, ஏரியகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகலில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW