ஒவ்வொரு மாதமும் அரசாங்கம் மேற்கொள்ளும் எரிபொருள் விலை திருத்தங்களுக்கு அமைவாக முச்சக்கரவண்டி கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர, முச்சக்கரவண்டி கட்டண திருத்தங்களுக்கு முறையான ஒழுங்குமுறைகள் இருக்கும் என்றார்.
முச்சக்கரவண்டி கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்காக மேல் மாகாண சபை குழுவொன்றை நியமித்துள்ள போதிலும், துரதிர்ஷ்டவசமாக இதுவரை கட்டண கட்டுப்பாடு எதுவும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அரசாங்கத்தின் முடிவுகளுக்கு ஏற்ப முச்சக்கரவண்டி கட்டணங்களை மாற்றியமைப்பதில்லை என்று சங்கம் முடிவு செய்திருந்தது.
முச்சக்கரவண்டி சாரதிகள் வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தமது கட்டணங்கள் தொடர்பில் தமது சொந்த முடிவுகளை எடுக்குமாறு தர்மசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW