Date:

மனைவியை கொலைசெய்து கழிவறை குழியில் புதைத்த கணவன்

ரிதிமாலியத்தவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமது மனைவியை கொலைசெய்து உடலை இரகசியமாக புதைத்துவிட்டு அவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக கூறிவந்த கணவன் மற்றும் அவரது மகனை ரிதிமாலியத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரிதிமாலியத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் சுமார் இரண்டு வருடங்களாக காணாமல் போயுள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து அப் பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்போது அவர் வழங்கிய முரண்பாடான வாக்குமூலத்தால் பொலிஸார் அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தகராறொன்றின்போது தமது மனைவியை தாக்கி தாம் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அத்துடன் தானும் தமது மகனும் இணைந்து சடலத்தை கழிவறை குழியில் இட்டு மூடியதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதோடு கொலை தொடர்பில் 72 வயதுடைய அவரது கணவரும், 26 வயதுடைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மஹியங்கனை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் அப் பெண்ணின் சடலத்தை எதிர்வரும் ஒகஸ்ட் 10 ஆம் திகதி மீளத் தோண்டி எடுக்குமாறும் நீதிவான் உத்தரவிடுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...

சி.ஐ.டிக்கு சென்ற தயாசிறி ஜயசேகர

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத்...