Date:

100 வது தடவையாக இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி

ஜேர்மனியை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் 100வது தடவையாக இலங்கை வந்துள்ளார்.

ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயதுடையவரே இவ்வாறு இலங்கை வந்துள்ளார்.

அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில் இடம்பெற்றது.

சிங்கள மொழியை சரளமாகப் பேசக் கூடிய ஜோர்ஜ் சீலன் 1971 ஆம் ஆண்டு 19 வயது இளைஞனாக முதன்முறையாக இலங்கைக்கு வந்தார்.

அதன் பிறகு ஜோர்ஜ் சீலன் ஆண்டுதோறும் இந்நாட்டுக்கு வந்துள்ளார்.

திருமணமாகாத ஜோர்ஜ் சீலன் முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

‘‘இலங்கைக்கு வரும் ஒவ்வொரு முறையும் அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா போன்ற புராதன இடங்களைப் பார்வையிடச் செல்வேன்.

இலங்கையின் வீதி அமைப்பு தற்போது மிகவும் முன்னேறியுள்ளது. இலங்கை அன்றைய காலத்தை விட மிகவும் அபிவிருத்தியடைந்துள்ளது.

நூறாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...