Date:

பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்த பக்கத்து வீட்டு இளைஞன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் வீடு ஒன்றில் மலசலகூடம் சென்ற முதிய பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை அறுத்துவிட்டு எடுத்துக் கொண்டு அவரை தள்ளி கீழே வீழ்த்தி விட்டு தப்பி ஓடிய அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள இளைஞன் ஒருவரை கைது செய்த சம்பவம் நேற்று (26) மாலை இடம் பெற்றுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரிய வருவதாவது,

இருதயபுரம் மேற்கு 8 ஆம் பிரிவிலுள்ள முதியவரான பெண் ஒருவர் தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சம்பவதினமான நேற்று 4.30 மணியளவில் சென்று வீடு திரும்பிய நிலையில் வீட்டின் வெளிபகுதியிலுள்ள மலசலகூடம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞன் ஒருவன் அவரின் கழுத்திலிருந்த 1 1/2 பவுண் தங்க சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு அவரை கீழே வீழ்த்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து வீட்டில் பொருத்தப்பட்ட சிசிரி கமரா மூலம் குறித்த கொள்ளையனை அடையாளம் கண்டுகொண்ட பொலிஸார் கொள்ளையடிக்கப்பட்டவரின் வீட்டில் இருந்து 4 ஆவது வீட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்த தங்க சங்கிலியை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டவர்

இலங்கையின் அடுத்த பிரதமர் நிதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர்...

தேசபந்து குற்றவாளி என சபாநாயகர் அறிவிப்பு

ஐஜிபி தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று...

இன்று காற்றுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...