Date:

ரூ.21 கோடி ‌ பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவு மற்றும் கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று புதன்கிழமை (26)  21 கோடி ‌ரூபாய்‌ பெறுமதியான தூள் செய்யப்பட்ட செயற்கை கஞ்சா மற்றும் செயற்கை ஆம்பெடமைன் ஆகிய போதைப்பொருட்களுடன் 07 சந்தேக நபர்களை கைது செய்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கிலிருந்து துபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமானம் மூலம்  ஒரு தொகை சரக்குகள் அனுப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஏர் கார்கோ பிரிவில் மூவர் இந்த சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக வந்த போது, ​​அவர்களுக்கு முன்னால் இந்த பார்சல் திறக்கப்பட்டது, அங்கு சுமார் 33 கிலோ கிராம் எடையுள்ள ஒரு கோடி ‌ரூபாய்‌ பெறுமதியான செயற்கை கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறிப்பிட்ட நபர்களும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து கிடைத்த மேலதிக தகவலின் அடிப்படையில், கொழும்பில் ஒரு வர்த்தக நிறுவனத் தலைவர் நடத்தும் சவுண்ட் சிஸ்டம் விற்பனைக் கடையில் இருந்து சுமார் 20 கோடி ‌ரூபாய்‌ பெறுமதியான 100 கிலோகிராம் செயற்கை ஆம்பெடமைன் பவுடர் கைப்பற்றப்பட்டது.

மேலும் கொழும்பு பத்தரமுல்ல பிரதேசத்தில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ரஷ்ய பிரஜை உட்பட மூவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை அணிக்கு அபார வெற்றி

ஆசிய கிண்ண டி20 தொடரின் குழு B பிரிவில் இன்று (13)...

இலங்கையின் வெற்றி இலக்கு 140 ஓட்டங்களாக நிர்ணயம்..

ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய...

கட்டாருடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது இலங்கை!

இலங்கை கட்டாருடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண்...

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...