Date:

பெருந்தொகை போதை பொருட்கள் மீட்பு!

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் தொகையொன்றை கண்டுபிடித்துள்ளனர்.

சீதுவை பிரதேசத்தில் அமைந்துள்ள குரியர் நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் 09 பொதிகள் சோதனைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தன.

நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து கொழும்பு, மஹரகம மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு இந்தப் பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.

பின்னர் அவை போலி முகவரி என தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட பொதிகளை திறந்து பார்த்தபோது, ​​2,000 போதை மாத்தி​ரைகள் மற்றும் 04 கிலோ குஷ், 300 கிராம் மேஜிக் காளான்கள் மற்றும் போதைப்பொருள் அடங்கிய சொக்லேட்டுகள் காணப்பட்டன.

இந்த பொருட்களின் பெறுமதி சுமா்ர் 70 மில்லியன் ரூபா என  தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசாவில் கடந்த 3 நாட்களில் மாத்திரம் உணவின்றி 21 குழந்தைகள் உயிரிழப்பு

காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு...

ரணிலின் தீர்மானத்துக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

2022  ஜூலை 17,   அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில்...

வவுணதீவு படுகொலை – பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சி.ஐ டி யினரால் கைது

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை  மாணவர்களை, புதன்கிழமை (23)  ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை...