Date:

நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட நாசா!

கடந்த ஆண்டு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டது.

நாசா 2022-ம் ஆண்டு டிசம்பரில் ஜேம்ஸ் வெப் என்ற பிரமாண்ட தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது.

ரூ.75 ஆயிரம் கோடி செலவில் செலுத்தப்பட்ட இந்த தொலைநோக்கியானது பிரபஞ்சத்தின் பிறப்பிடம் குறித்த நான்கு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.

இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இந்த புகைப்படங்களே பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு காட்சியாக உள்ளன.

அந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை நாசா தற்போது கொண்டாடி வருகிறது.

அதன் ஒருபகுதியாக மேலும் ஒரு புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படம் ரோ ஒபியுச்சி மேகக்கூட்டத்தில் நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியை காட்டுகிறது.

இதில் சுமார் 50 இளம் நட்சத்திரங்கள் உள்ளன. அவை அனைத்தும் சூரியனை போன்ற நிறை உடையவை என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு

ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பிலான அறிவித்தல் மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களின்...

பதுளை பஸ் விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பதுளை விபத்தில் சாரதியின் உதவியாளரே பேருந்தை செலுத்தியுள்ளார் பதுளை - மஹியங்கனை பிரதான...

Breaking ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க...

மோதலில் அமெரிக்கா ஈடுபட்டால் அது எல்லோருக்கும் ஆபத்து – அப்பாஸ் அராக்சி

இஸ்ரேல் – ஈரானுக்கிடையிலான போர் உக்கிரமடைந்து வரும் நிலைமையில் இப்போரில் அமெரிக்கா...