Date:

10 வயதுடைய மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் பத்து வயதுடைய  தனது சொந்த மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்த 79 வயதுடைய தந்தைக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுதுடன் 10,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரண சிறைத் தண்டனையும் விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் பத்து  வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த 2013 ஆம் ஆண்டு அடித்து துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில்  அவரது தந்தையான 79 வயதுடைய முதியவர் விசாரணைகள் மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டு நேற்று கிளிநொச்சி  மேல் நீதிமன்றத்தில் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது நேற்று பகல் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிவான்  ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்புகாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

கிளிநொச்சி நகரை அன்மித்த  பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது 10 வயதுடைய மகளை  அடித்து  துன்புறுத்தியும் பூவரசம் தடியினால் தாங்கியும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் சிறுமியின் வாக்கு மூலத்தின் மூலமும்  சாட்சியங்கள் மூலமும்; சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை என்பவற்றின் மூலம் மன்று குறித்த முதியவரை குற்றவாளியாக இனம் கண்டு இன்றைய தினம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன் போது எதிரி சார்பாக ஆஜரான சட்டத்தரணி குறித்த குற்றவாளியானவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  மாதாந்த சிகிச்சைகளை பெற்று வருவதாகவும் மன்றுக்கு விண்ணப்பம் செய்திருந்தமையினை  கவனத்தில் எடுத்த மன்று குறித்த குற்றவாளிக்கு சிறைச்சாலையில் வைத்திய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது

இவ்வாறு தனது சொந்த மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்த 79 வயதுடைய தந்தைக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுதுடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரணசிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கம்பஹா மருத்துவமனையில் பதற்றம்

கம்பஹா மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரிகளின் அலட்சியத்தால் நோயாளிகள்...

மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம்! – ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை!

இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஈரான்...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துவது எப்படி? – கல்வி பிரதியமைச்சரின் அறிக்கை!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும்...

பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை...