2023ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,190 பேர் விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 1,126 விபத்துக்கள் சம்பவித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சாரதிகளின் கவனயீனம் காரணமாகவே அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.