Date:

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும்

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும், பொருளாதாரம் நிலைபெறும் போது மக்களுக்கு அந்த நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் வட்டி வீதம் குறைக்கப்பட்டதில் அதிகபட்ச மதிப்பு நேற்றைய தினம் பதிவானதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, 91 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் 2.5% குறைந்துள்ளதுடன் 182 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் சுமார் 3.4% குறைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திரிபோஷாவுக்கு தட்டுப்பாடு

பல மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் திரிபோஷாவுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாக...

யட்டியந்தோட்டை பட்ஜெட் தோற்றது

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச சபையின் 2026...

இலங்கையில் உள்ள திருநங்கைகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் உள்ள திருநங்கை பாலியல் தொழிலாளர்களில் அல்லது திருநங்கைப் பாலியல் அடையாளத்தைக்...

ரணிலுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...