Date:

போதைக்கு அடிமையாகிய 10 வயது சிறுவன் கைது

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்  ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – கரவெட்டி, துன்னாலையைச்  சேர்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த பாடசாலையை விட்டு இடைவிலகிய குறித்த  சிறுவன், உயிர் கொல்லி ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளான்.

இந்தச் சிறுவன் தொடர்பில் கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அந்தச் சிறுவன் ஊசி மூலம் ஹெரோயினை உடலில் ஏற்றிக் கொள்ளும் வேளையில்  பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளான்.

தன்னைப் போலவே வேறு பல சிறுவர்களும் இவ்வாறு ஹெரோயின் நுகர்வில் ஈடுபட்டுள்ளதாக  பொலிஸ் விசாரணைகளின் போது அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டேன் பிரியசாத் படுகொலை – துப்பாக்கிதாரி கைது

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான துப்பாக்கிதாரி,...

ஐ.தே.க மாநாட்டில் சஜித் பங்கேற்கமாட்டார்?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கலந்து...

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் திங்கட்கிழமை (22) வரை...

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட...