மே மாதத்தில் தென்மேற்கு பருவக்காற்று நிலவரத்துடன் களனி ஆற்றுப்படுகையில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால், அதற்கு முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும் என கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசிறி நேற்று அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு நேற்றுக் காலை கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன், மாவட்டச் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.