கருங்காலை வீதிக்கு அருகில் வைத்து குறித்த நபர் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் சுமார் 50 இலட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவராவார்.
அத்துடன், சந்தேக நபர் இன்று (27) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.