Date:

சவூதி அரேபிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றிகள் – எம் எஸ் தௌபீக்

(எஸ் சினீஸ் கான்)

சூடானின் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் 62 வெளிநாடுகளைச் சேர்ந்த 2148 பேரை மீட்டெடுக்க சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு நன்றிகள் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக் அவர்கள் அவரது விஷேட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவரது அறிக்கையில், சூடானின் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் 62 வெளிநாடுகளைச் சேர்ந்த 2148 பேரை மீட்டெடுக்க சவுதி அரேபிய அரசாங்கம் இராப்பகலாக காத்திரமான பல அற்பணிப்புகளை செய்து மீட்டெடுத்துள்ளது.

விஷேட விமானங்கள், விஷேட விமானப்படை விமானங்கள், கப்பல்கள் மூலம் போரில் நிர்க்கதியான வெளிநாட்டவர்களை பாதுகாப்பான முறையில் சவுதி அரேபியாவுக்கு அழைத்து வந்து உணவு மற்றும் மருந்து தங்குமிட வசதிகள் அனைத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்தது அவரவர் நாட்டு தூதரகங்களுடனும் அவரவர் நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களுடனும் கலந்தாலோசித்து அவர்களது நாடுகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்க சகல விதமான ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கறது.

உண்மையில் சவுதி அரேபியாவின் இந்த மனிதாபிமான செயல் மிகவும் வரவேற்கத்தக்க சகலராலும் பாராட்டப்படுகின்ற விடயமாகும்.

சூடானில் நிர்க்கதியான இலங்கையர்களையும் சவுதி அரேபியா பாதுகாப்பான முறையில் சவுதி அரேபியாவுக்கு அழைத்து வந்து அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது மட்டுமல்ல, சவுதியில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க சகல விதமான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

உடனடியாக நடவடிக்கை எடுத்த சவூதி அரசாங்கத்திற்கு மிக்க நன்றிகள். எனவும் அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...