Date:

சவூதி அரேபிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றிகள் – எம் எஸ் தௌபீக்

(எஸ் சினீஸ் கான்)

சூடானின் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் 62 வெளிநாடுகளைச் சேர்ந்த 2148 பேரை மீட்டெடுக்க சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு நன்றிகள் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக் அவர்கள் அவரது விஷேட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவரது அறிக்கையில், சூடானின் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் 62 வெளிநாடுகளைச் சேர்ந்த 2148 பேரை மீட்டெடுக்க சவுதி அரேபிய அரசாங்கம் இராப்பகலாக காத்திரமான பல அற்பணிப்புகளை செய்து மீட்டெடுத்துள்ளது.

விஷேட விமானங்கள், விஷேட விமானப்படை விமானங்கள், கப்பல்கள் மூலம் போரில் நிர்க்கதியான வெளிநாட்டவர்களை பாதுகாப்பான முறையில் சவுதி அரேபியாவுக்கு அழைத்து வந்து உணவு மற்றும் மருந்து தங்குமிட வசதிகள் அனைத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்தது அவரவர் நாட்டு தூதரகங்களுடனும் அவரவர் நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களுடனும் கலந்தாலோசித்து அவர்களது நாடுகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்க சகல விதமான ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கறது.

உண்மையில் சவுதி அரேபியாவின் இந்த மனிதாபிமான செயல் மிகவும் வரவேற்கத்தக்க சகலராலும் பாராட்டப்படுகின்ற விடயமாகும்.

சூடானில் நிர்க்கதியான இலங்கையர்களையும் சவுதி அரேபியா பாதுகாப்பான முறையில் சவுதி அரேபியாவுக்கு அழைத்து வந்து அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது மட்டுமல்ல, சவுதியில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க சகல விதமான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

உடனடியாக நடவடிக்கை எடுத்த சவூதி அரசாங்கத்திற்கு மிக்க நன்றிகள். எனவும் அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரஷ்யாவிற்கு ரணில் விஜயம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை (12) அன்று காலை ரஷ்யாவிற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார். ரணில் விக்கிரமசிங்க பல சொற்பொழிவுகளில் கலந்து கொள்ளவும் உள்ளார் ​மேலும், 22 ஆம் திகதி நாடு...

NPP உறுப்பினரான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி விபரீத முடிவு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த...

இலங்கையில் ஏற்பட்ட இரண்டு கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக வடமேல் மருத்துவ...

கல்வியமைச்சின் இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக எம்.என்.எப். நஸ்ரியா முனாஸ் நியமனம்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373