Date:

பரசிட்டமோல் அருந்திய சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 7 வயதுச் சிறுமி ஒருவர் அதிகளவு பரசிட்டமோல் மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.

உடஹெந்தென்ன, உடுவெல்ல தாமரவல்லி கொலனி சேர்ந்த ஷாமலி தருஷி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நளின் ஏ. மெதிவக மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் போது தெரிய வந்தது.

குறித்த சிறுமி உடுவெல்ல கனிஷ்ட கல்லூரியில் தரத்தில் கல்வி கற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பளை குருந்துவத்தை வைத்தியசாலையில் இருந்து இரண்டு தடவைகள் அவருக்கு பெற்றோர்கள் மருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவிற்குப் பதிலாக வைத்தியசாலையின் மருந்தகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வயது வந்தோருக்கான டோஸ் குழந்தைக்கு வழங்கப்பட்டதால், குழந்தைக்கு இந்த அதிக டோஸ் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

குருந்துவத்தை வைத்தியசாலையில் இருந்து தினமும் சுமார் அறுநூறு நோயாளர்கள் சிகிச்சைக்காக வருவதாகவும் அவர்களுக்கு மருந்து வழங்குவதற்கு ஒரு மருந்தாளுனர் மாத்திரமே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரான்ஸில் பாரிய போராட்டம்: 200 பேர் கைது

பி​ரான்ஸில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலி​ஸார் கைது...

ரயில் தடம் புரண்டது

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில்,...

பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை:10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை 10...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...