நானுஓயா நிருபர்
நானுஓயா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட நானுஓயா கிளாசோ மேற்பிரிவில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நானுஓயா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நானுஓயா கிளாசோ தோட்டத்தில் கைவிடப்பட்ட வீட்டில் பின்பக்கத்தில் சந்தேகத்திற்கிடமான கடதாசி பெட்டி பொதியில் பரிசு பொருட்கள் போல் பொதி செய்யப்பட்ட நிலையில் பெற்ரோல் குண்டுகள் போல் வெடிபொருட்கள் காணப்படும் பகுதியை அடையாளப்படுத்தி பெட்டியில் இருந்த குறித்த வெடிக்கும் திரவ பொருட்களை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.