எதிர்காலத்தில் அரசாங்கம் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“சுங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமான இலக்கை அடைவதற்கும் இந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கை உதவும்.
முதல் 03 மாதங்களுக்கு சுங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள வருமான இலக்கு 270 பில்லியன் ரூபாவாகும்.
இதேவேளை 2021இல் 485 பொருட்களும் 2022 இல் 750 பொருட்களும் இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளன.
இது தொடர்பான கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும்” என்றார்.